"தமிழக மக்களிடம் இருந்து" என விலாசம் பொறிக்கப்பட்ட மருந்து, உணவு, உடை அடங்கிய அத்தியாவசிய நிவாரணப்பொருட்களுடன் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று காலை ஹான்ரியா கப்பல் சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டுள்ளது.
போர் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 300 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகின்றன எனத் தெரிவித்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர் இந்தக் குடும்பங்கள் நெருக்கடிகளின் மத்தியில் தற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிவர்த்திசெய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
"தமிழக மக்களிடம் இருந்து" என விலாசம் பொறிக்கப்பட்ட மருந்து, உணவு, உடை அடங்கிய அத்தியாவசிய நிவாரணப்பொருட்களுடன் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று காலை ஹான்ரியா கப்பல் சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டுள்ளது.
போர் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 300 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகின்றன எனத் தெரிவித்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர் இந்தக் குடும்பங்கள் நெருக்கடிகளின் மத்தியில் தற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிவர்த்திசெய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காப்படையினரின் தாக்குதல்களால் ஓமந்தை சோதனைச் சாவடி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது.கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் பாதுகாப்புக்காரணங்களைக் காட்டி அந்தப்பகுதியில் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது.
கிளிநொச்சி நகரத்திற்கு தென்மேற்கே அக்கராயன் கோணாவில் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் பகுதியிலிருந்து இன்று காலை 10 மணியிலிருந்து ஆட்லறி, மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் கோணாவில் நோக்கி சிறிலங்காப்படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் முருகன் கோவில் மற்றும் அதனையண்டிய மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குழந்தை முதியவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.